search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெய்ட்டி புயல்"

    வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதால் நாளை முதல் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. #IMD #TNRain
    சென்னை:

    பெய்ட்டி புயல் ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடந்தது. தற்போது அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு குறைந்துள்ளது.

    இதற்கிடையே தென் மேற்கு வங்கக் கடல் மற்றும் தெற்கு அந்தமானை ஒட்டிய பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது.


    இதன் காரணமாக தமிழகத்தில் நாளை (20-ந் தேதி) வடதமிழக கடலோர பகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஆங்காங்கே லேசானது முதல் மிதமான மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

    தொடர்ந்து 21-ந்தேதி தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்யலாம் என்றும், 22-ந்தேதி அனேக இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. #IMD #TNRain #PeitiCyclone
    புதுவை மாநிலம் ஏனாமில் ‘பெய்ட்டி’ புயலால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதையடுத்து முகாம்களில் சுமார் 10 ஆயிரம் பேர் தஞ்சம் அடைந்துள்ளனர். #PietyCyclone
    புதுச்சேரி:

    ‘பெய்ட்டி’ புயல் ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே நேற்று மதியம் கரையை கடந்தது.

    ஆந்திர மாநிலம் காக்கி நாடா அருகே புதுவை மாநிலத்தின் ஏனாம் பிராந்தியம் உள்ளது. புயல் கரையை கடந்தபோது, 80 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது.



    இதனால் மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்தது. கனமழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. சாலைகளிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புயல் பாதுகாப்பு மையம் மற்றும் பள்ளிகளில் மக்கள் தங்க வைக்கப்பட்டு இருந்தனர்.

    முகாம்களில் சுமார் 10 ஆயிரம் பேர் தஞ்சம் அடைந்துள்ளனர். அவர்களுக்கு கல்வித்துறையின் மதிய உணவுக்கூடம் மூலம் உணவு வழங்கப்பட்டு வருகிறது.

    புயல் பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகளை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், வருவாய்த்துறை செயலாளர் தேபேஷ்சிங், கலெக்டர் அபிஜித் விஜய் சவுத்திரி ஆகியோர் முடுக்கி விட்டுள்ளனர். மரங்களை அப்புறப்படுத்துதல், மின் கம்பங்களை சீரமைத்தல் உள்ளிட்ட நிவாரண பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

    புயல் நிவாரண பணிகள் குறித்து அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கூறியதாவது:-

    பெய்ட்டி புயல் கரையை கடந்தபோது, 11 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது. 6 மணி நேரத்தில் இந்த மழை கொட்டி தீர்த்துள்ளது. மழையுடன் சூறைக்காற்றும் வீசியதால் மரங்கள், மின் கம்பங்கள் சரிந்து விழுந்துள்ளது.

    வீடுகள் மீது மரங்கள் விழுந்துள்ளது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் உயிர்ச்சேதம் இல்லை. தேவையான நிவாரண பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.

    இவ்வாறு மல்லாடி கிருஷ்ணாராவ் கூறினார். #PietyCyclone



    பெய்ட்டி புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பாக விவாதிக்க ஆந்திரப்பிரதேசம் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு இன்று தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தினார். #BeityCyclone #HeavyRain #ChandrababuNaidu
    அமராவதி:

    ஆந்திரா மாநிலத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் அருகில் பெய்ட்டி புயல் இன்று கரையை கடந்தது. கரையை கடந்தபோது 80 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. 

    இதனால் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் புயல், மழை காரணமாக மரங்கள், மின்கம்பங்கள் விழுந்துள்ளது. அதனை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    புயல் ஆபத்தைத் தொடர்ந்து கடலோர மாவட்டங்கள் வழியாக செல்லும் 22 பயணிகள் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நிறைய ரெயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது. புயல் தாக்கும் பகுதிகளில் மீட்புப்பணிகளை மேற்கொள்ள தேசிய பேரிடர் மீட்பு குழு உள்பட மீட்புக் குழுக்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளன. 



    விசாகப்பட்டினம், கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி, கிருஷ்ணா, குண்டூர் ஆகிய மாவட்டங்களில் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த மாவட்டங்களில் மீட்புக்குழுவினர் மற்றும் அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளனர்.

    இந்நிலையில், பெய்ட்டி புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பாக விவாதிக்க ஆந்திரப்பிரதேசம் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு இன்று தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தினார். புயலால் பாதிப்பு அடைந்துள்ள மக்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை விரைவில் செய்துதர வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். #BeityCyclone #HeavyRain #ChandrababuNaidu
    ஆந்திரா மாநிலத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் அருகில் பெய்ட்டி புயல் இன்று கரையை கடந்தது. கரையை கடந்தபோது 80 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. #MeteorologicalCenter #beitycyclone #heavyrain
    ஐதராபாத்:

    வங்கக் கடலின் தென் கிழக்கு பகுதியில் கடந்த சனிக்கிழமை குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இரு நாட்களில் அது வலுப்பெற்று புயல் சின்னமாக மாறியது.

    அந்த புயல் சின்னத்துக்கு தாய்லாந்து நாடு தேர்வு செய்து வழங்கிய ‘‘பெய்ட்டி’’ எனும் பெயர் சூட்டப்பட்டது. அந்த புயல் சின்னம் வடக்கு மற்றும் வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வந்தது. அந்த புயல் சின்னம் கடந்த வார மத்தியில் புயலாக உருவெடுத்தது.

    அதன் நகர்வை கணித்த போது முதலில் அது சென்னை அருகே கரையை கடக்கும் என்று கூறப்பட்டது. இதனால் தமிழ்நாட்டின் வடமாவட்டங்களில் கணிசமான அளவுக்கு மழை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதன் திசை ஆந்திரா நோக்கி நகர்ந்ததால் தமிழ்நாட்டுக்கு மழை கிடைக்காமல் போய் விட்டது.

    என்றாலும் பெய்ட்டி புயலின் கடும் சீற்றம் காரணமாக கடந்த 3 நாட்களாக தமிழக கடலோரப் பகுதிகளில் பலத்த தரைக்காற்று வீசியது. கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. சுமார் 4 மீட்டர் உயரம் வரை கடல் அலைகள் மேல் எழுந்து ஆர்ப்பரித்தன.

    இதனால் தமிழக மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல அனுமதிக்கப்படவில்லை. பெய்ட்டி புயலின் நகர்வு மணிக்கு 11 கி.மீ வேகத்திலேயே இருந்ததால் கடல் கொந்தளிப்பு நீடித்தது. சில இடங்களில் கடல் தண்ணீர் ஊருக்குள் புகுந்தது.

    இந்த நிலையில் நேற்று பெய்ட்டி புயல் தீவிரமான நிலையில் இருந்து அதிதீவிர புயலாக மாறியது. நேற்று காலை அந்த புயல் சென்னைக்கு கிழக்கு, தென், கிழக்கு திசையில் சுமார் 430 கி.மீ. தொலைவில் மையம் கொண்டிருந்தது.

    நேற்று மாலை அது 380 கி.மீ. தொலைவுக்கு வந்தது. இதனால் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் குளிர்ந்த காற்று வீசியது. வானம் மேகமூட்டத்துடன் இருந்தது.

    இதனால் பலத்த மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மழை பெய்யாமல் குளிர்ந்த காற்று மட்டும் மிக அதிகமாக வீசியது.

    இன்று அதிகாலை சென்னையை நோக்கிய திசையில் இருந்து பெய்ட்டி புயல் விலகிச் சென்றது. இன்று காலை 8 மணி நிலவரப்படி சென்னையில் இருந்து வடக்கு, வடகிழக்கு திசையில் சுமார் 300 கி.மீட்டர் தொலைவில் பெய்ட்டி புயல் மையம் கொண்டிருந்தது. 8 மணிக்கு பிறகு பெய்ட்டி புயலில் வேகம் அதிகரித்தது.

    16 கி.மீ வேகத்தில் இருந்து 23 கி.மீ. வேகமாக புயலில் சீற்றம் ஏற்பட்டது. இன்று மதியம் அதிதீவிர நிலையில் ஆந்திரா கடலோரத்தை பெய்ட்டி புயல் நெருங்கியது. இதனால் ஆந்திரா கடலோர மாவட்டங்களில் பலத்த மற்றும் மிக பலத்த மழை பெய்தது.

    காலை 10 மணியளவில் பெய்ட்டி புயல் மசூலிப்பட்டினத்தில் இருந்து 150 கி.மீ. தொலைவில் இருந்தது. காக்கிநாடாவில் இருந்து சுமார் 193 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டிருந்தது. அது மேலும் வடக்கு நோக்கி நகர்ந்து கரையை நெருங்கும் போது புயல் சற்று வலு குறையும் என்று கணிக்கப்பட்டிருந்தாலும் பலத்த சூறைக்காற்று வீசும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.



    இந்நிலையில் இன்று மதியம் பெய்ட்டி புயல் பலத்த காற்றுடன் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் கரையை கடந்தது. பல்வேறு இடங்களில் புயல், மழை காரணமாக மரங்கள், மின்கம்பங்கள் விழுந்துள்ளது. அதனை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. புயல் காற்றுடன் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

    இதன் காரணமாக இன்று வடக்கு ஆந்திரா, ஒடிசா, தெற்கு சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் மாநிலங்களில் மிதமான மற்றும் பலத்த மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

    இதைத் தொடர்ந்து ஆந்திரா கடலோர மாவட்டங்களில் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

    புயல் ஆபத்தைத் தொடர்ந்து ஆந்திரா கடலோர பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடலோர மாவட்டங்கள் வழியாக செல்லும் 22 பயணிகள் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நிறைய ரெயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது.

    புயல் தாக்கும் பகுதிகளில் மீட்புப்பணிகளை மேற்கொள்ள தேசிய பேரிடர் மீட்பு குழு உள்பட மீட்புக் குழுக்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளன. உணவு பொருட்கள், குடிநீரையும் அதிக அளவில் ஆந்திர மாநில அரசு கை இருப்பு வைத்துள்ளது.

    விசாகப்பட்டினம், கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி, கிருஷ்ணா, குண்டூர் ஆகிய மாவட்டங் களில் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த மாவட்டங்களில் மீட்பு குழுவினர் மற்றும் அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளனர்.

    ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு இன்று மாலை விசாகப்பட்டினத்தில் புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட உள்ளார். #MeteorologicalCenter #beitycyclone #heavyrain
    பெய்ட்டி புயல் காரணமாக காசிமேடு மீனவர்கள் 300 பேர் ஆந்திராவில் தஞ்சம் அடைந்து உள்ளனர். #KasimeduFishermen

    சென்னை:

    காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 1200-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் கடலில் மீன்பிடித்து வருகிறார்கள்.

    பெய்ட்டி புயல் காரணமாக கடலுக்குள் சென்ற மீனவர்கள் கரை திரும்பும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனால் குறைந்த தூரத்தில் இருந்த மீனவர்கள் உடனடியாக கரை திரும்பினர்.

    ஆனால் ஆழ்கடலில் மீன்பிடித்த 100-க்கும் மேற்பட்ட விசைப்படகில் இருந்த 300 மீனவர்கள் கரை திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது.

    இதையடுத்து அவர்களை அருகில் உள்ள ஆந்திரா பகுதிக்கு செல்லுமாறு வயர்லெஸ் மூலம் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து காசிமேடு மீனவர்கள் ஆந்திரா மாநிலம் கிருஷ்ணாபட்டினம் அருகே பத்திரமாக கரை சேர்ந்தனர்.

    300 மீனவர்கள் அங்கு தஞ்சம் அடைந்து உள்ளனர். காசிமேடு மீனவர்கள் அனைவரும் பத்திரமாக இருப்பதாக மீன்வளத்துறை உதவி இயக்குனர் சுதா தெரிவித்தார். #KasimeduFishermen

    பெய்ட்டி புயல் தீவிர புயலாக மாறி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. #MeteorologicalCenter #beitycyclone #heavyrain
    சென்னை:

    பெய்ட்டி புயல் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியதாவது:-

    சென்னையில் இருந்து வடகிழக்கு திசையில் 300கி.மீ தொலைவில் உள்ள பெய்ட்டி புயல் தீவிரப் புயலாக மாறியது. 26 கி.மீ வேகத்தில் நகரும் பெய்ட்டி புயல் நாளை பிற்பகல் காக்கிநாடா அருகே கரையை கடக்கும்.

    பெய்ட்டி புயல் கரையை கடக்கும்போது 70-90 கி.மீ முதல் 100 கி.மீ வேகத்தில் காற்று வீசும். சென்னையை பொறுத்தவரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. ஆந்திரா-புதுச்சேரி மாநிலத்திற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  #MeteorologicalCenter #beitycyclone #heavyrain
    பெய்ட்டி புயல் கரையை நெருங்கி வரும் நிலையில், சென்னையில் பலத்த காற்று வீசி வருகிறது. நாளை மசூலிப்பட்டினத்திற்கும், காக்கி நாடாவிற்கும் இடையே கரையை கடக்கிறது.
    சென்னை:

    தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள ‘பெய்ட்டி’ புயல் சென்னைக்கு தென்கிழக்கே 530 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. சென்னை நோக்கி தொடர்ந்து நகர்ந்து வரும் இந்தப் புயல் இன்று தீவிர புயலாக மாறி வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை (17-ந்தேதி) மாலை ஆந்திரா கடற்கரையில் மசூலிப்பட்டினத்திற்கும், காக்கி நாடாவிற்கும் இடையே கரையை கடக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    புயல் ஆந்திரா நோக்கி நகர்வதால் சென்னைக்கு பாதிப்பு எதுவும் இருக்காது. ஆனால், சென்னை மற்றும் வடதமிழகத்தில் மணிக்கு 55 முதல் 65 கி.மீ. வேகத்திலும், அதிக பட்சம் 75 கி.மீ. வேகத்திலும் பலமான சூறைக்காற்று வீசுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். காற்றில் புழுதி பறந்ததால் நடந்து சென்ற மக்கள் அவதிப்பட்டனர். எதிர்பார்த்த அளவுக்கு மழை இல்லை. காலையில் லேசாக தூறியது.

    இந்த நிலையில் வட தமிழகத்தின் கடலோர பகுதியில் மிதமான மழையும், ஒருசில இடங்களில் கன மழையும் பெய்யும் என்றும் தென்மேற்கு வங்க கடல் மற்றும் மேற்கு மத்திய வங்க கடல் பகுதிக்கு மீனவர்கள் யாரும் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    புயல் வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்வதால் கடலோர ஆந்திரா, ஒடிசா மாநிலங்களில் மிக பலத்த மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இன்று தென்மேற்கு வங்க கடல் மற்றும் மேற்கு மத்திய வங்க கடல் பகுதியில் மணிக்கு 80 முதல் 100 கி.மீ. வேகத்திலும், அதிகபட்சம் 110 கி.மீ. வேகத்திலும் காற்று வீசும், கடற்கரை பகுதியில் மணிக்கு 60 முதல் 70 கி.மீ. வேகத்திலும் அதிகபட்சம் 80 கி.மீ. வேகத்திலும் காற்று வீசும், கடல் அலைகள் பல மீட்டர் உயரத்துக்கு எழும்பி கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    புயல் நாளை (17-ந்தேதி) கரையை கடந்த பின்பு வலு இழந்த புயலாகவும், 18-ந்தேதி காற்றழுத்த மண்டலமமாகவும் நிலைபெறும் என்று வானிலை மையம் தெரிவித்து உள்ளது.
    ×